கியூபெக் மாகாணத்தில் செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கியுள்ளது.
சூறாவளி உருவாகும் அபாயத்துடனான புயல் என, இந்த புயல் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
இதனால் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 100,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.
தெற்கிலிருந்து வரும் வெப்பமான காற்று மற்றும் வடக்கிலிருந்து வரும் குளிர் காற்று மோதுவதால் இந்த ஆபத்தான வானிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லாவல், லாரன்டைட்ஸ், லனோடியர், அவுட்டாவாய்ஸ், அபிடிபி-டெமிஸ்காமிங், சென்டர்-டு-கியூபெக், சவுடியர்-அப்பலாச்சஸ் , மொன்டெரேகி மற்றும் எஸ்ட்ரியின் சில பகுதிகள் உட்பட பல பகுதிகளுக்கு, கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் சூறாவளி உருவாகுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என, கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.