நடந்து முடிந்த கனேடிய பொதுத்தேர்தலில் பிரபலமான பல அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற உறுப்புரிமை முடிவுக்கு வந்துள்ளது.
திங்களன்று நடந்த தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான தோல்வியில், கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லியேவ் மற்றும் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர் இருவரும் தங்கள் சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்தனர்.
ஒட்டாவா நகரத்தின் கார்ல்டன் தேர்தல் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிபெற்று, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த, பியர் பொய்லியேவ் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
மேலும், இந்தத் தேர்தலில் பல பரிச்சயமான முகங்கள் கனேடிய நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுகின்றன.
இந்தத் தோல்விகள் கனேடிய வாக்காளர்களின் மனநிலையில் சாத்தியமான மாற்றத்தையும், நாடாளுமன்ற பொதுச்சபை அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் குறிக்கின்றன என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.