மினுவங்கொட பகுதியில் இன்று பிற்பகல் திலீப லக்மால் எனப்படும் ‘பஸ் திலீப்’ என்பவரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றனர்.
சம்பவத்தின்போது, பஸ் திலீப், அவரது மனைவி, நண்பர் மற்றும் மூன்று பிள்ளைகள் வீட்டு முற்றத்தில் இருந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், பாதுகாப்புப் படையினர் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து, திலீப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். தாக்குதல் தோல்வியடைந்ததை அடுத்து, அவர்கள் தப்பிச் சென்ற காட்சி அருகிலுள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
மினுவங்கொட பொலிஸார், சந்தேக நபர்களைக் கண்டறிய தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
