கண்டி, பல்லேகலை பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் கம்பிப் பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விடுவித்துள்ளனர்.
ரன்தெனிகல வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இச்சம்பவம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மிருக வைத்தியர் அக்கலங்க பினிதிய தலைமையிலான குழுவினர், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பொறியிலிருந்து மீட்டனர்.
பின்னர், சுமார் 6-7 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் சிறுத்தையை ரன்தெனிகல பிரதேசத்தில் பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர்.
மீட்கப்பட்ட சிறுத்தைக்கு உட்காயங்கள் இல்லாததால், வெளிக்காயங்களுக்கு மட்டும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, அது காட்டில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
