மனிடோபா மாகாணத்தின் ஸ்ப்ரூஸ் வூட்ஸ் (Spruce Woods) தேர்தல் மாவட்டத்திற்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தென்மேற்கு மனிடோபாவில் 334 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புடைய திட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இடைத்தேர்தல் காலத்தில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்புகள் அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த மே மாதம் முதல், மனிடோபா முதல்வர் கினேவ் அல்லது அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் தென்மேற்கு மனிடோபாவிற்குச் சென்று, அந்த மாகாணத்திற்கான திட்டங்களுக்காக கணிசமான நிதிகளை அறிவித்துள்ளனர்.
இது குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த நிதி அறிவிப்புகளுக்கும், தோற்றங்களுக்கும் வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மனிடோபா முதல்வர் கினேவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிராண்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிதி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இடைத்தேர்தல் குறித்த கேள்விகளை விட, நாம் இந்த நாட்களில் மிக மிகப் பெரிய கேள்விகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
