கியூபெக் மாகாணத்தில் செயற்படவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கு சுமார் 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது கியூபெக் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையும், அவற்றின் வளர்ச்சியைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொத்தம் 98.6 மில்லியன் டொலர் இந்த 23 செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்குள் செலுத்தப்படும்.
இதில் மூன்றில் ஒரு பங்கு கனடாவின் மத்திய அரசாங்கத்திடம் இருந்தும், மீதமுள்ள தொகை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் வருகிறது.
கனடாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் தனியார் நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் கூட்டமைப்பான Scale AI, இந்த நிதி ஒதுக்கீட்டை அறிவித்தது.
இந்த 23 திட்டங்களில், விமானப் பராமரிப்பு திட்டமிடல், சில்லறை வணிகத்திற்கான தேவை கணிப்பு, சரக்கு மேலாண்மை மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கு வரிசைப்படுத்தல் அமைப்புகளின் அறிமுகம் போன்ற பல செயற்கை நுண்ணறிவு தீர்வுகளின் நடைமுறைப்படுத்தல் அடங்கும்.
இந்த திட்டங்கள், சுரங்கம், வணிக சேவைகள், நுகர்வோர் சேவைகள், சுகாதாரம், உற்பத்தி, சில்லறை வர்த்தகம், மென்பொருள் மற்றும் போக்குவரத்து போன்ற பல்வேறு தொழில்களில் AI பரவி வருவதை காட்டுகின்றன என்று Scale AI இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியன் பில்லோட் தெரிவித்துள்ளார்.
