அல்பெர்ட்டாவில் உள்ள நான்கு முதல் நிலைப் பழங்குடி சமூகங்களின் தலைவர்கள், மாகாணத்தின் வளர்ந்து வரும் டேட்டா சென்டர் துறையில் தீவிரமாகப் பங்கேற்க ஆர்வமாக இருந்தாலும், மாகாணம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு தவறான அணுகுமுறையைப் பயன்படுத்துவதாக எச்சரித்துள்ளனர்.
பழங்குடி சமூகங்களின் தலைவர்கள், இந்த வாரம் மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் மற்றும் அவரது அரசாங்க உறுப்பினர்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
டேட்டா சென்டர்கள் என்பவை செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற பயன்பாடுகளுக்குத் தேவையான கணினி திறனை வழங்கும் மிகப்பெரிய வசதிநிலையங்கள் ஆகும்.
இவற்றை இயக்குவதற்கும் குளிர்விப்பதற்கும் பெரிய அளவில் மின்சக்தி தேவைப்படும்.
புதிய திட்டங்களுக்கு அல்பெர்ட்டா அரசாங்கம் ஒதுக்கியுள்ள மின்சக்தி அளவு போதுமானதாக இல்லை என்று முதல் நிலைப் பழங்குடித் தலைவர்கள் வாதிடுகின்றனர்.
அல்பெர்ட்டா அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் டேட்டா சென்டர் முதலீட்டை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
இருப்பினும், 1,200 மெகாவாட் மின்சக்தி எனும் வரம்பு நிலையானது, மெட்டா மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு தவறான சமிக்ஞையை அனுப்புகிறது என்று தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
