கியூபெக்கின் செயிண்ட்-ஜோசப்-டி-பியூஸ் பகுதியில் நடந்த கொண்டாட்ட நிகழ்வின் போது, பலரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபர் ஊசிகளைக் கொண்டு இந்த தாக்குதலைப் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடந்த ஓகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்த ஊசிகள் மூலம் தங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஏதேனும் பொருள், உடலுக்குள் செலுத்தப்பட்டதாக சந்தேகிப்பவர்கள், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என கியூபெக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
