Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களுக்கான சேவைகளைக் குறைக்க நடவடிக்கை

ஜூன் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் கியூபெக் மாகாணம், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களுக்கான சேவைகளைக் குறைக்கக்கூடும் என கியூபெக்கின் குடிவரவு அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரொபேர்ஜ் (Jean-François Roberge) எச்சரித்துள்ளார்.

கனடாவின் மத்திய அரசாங்கம் தனது வருடாந்திர குடியேற்ற இலக்குகளை பாதியாகக் குறைக்கத் தவறினால் இந்த கடுமையான முடிவை எடுக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தில், குறிப்பாக மொன்ட்ரியல் மற்றும் லாவால் (Laval) பகுதிகளில், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ரொபேர்ஜ், கூட்டணி அவெனிர் கியூபெக் (CAQ) அரசாங்கத்தின் 2026 – 2029 ஆம் ஆண்டுக்கான குடியேற்ற இலக்குகளை விளக்கும் அறிக்கையை வெளியிட்டார்.

இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், கடினமான முடிவுகள் அவசியமாகலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு புகலிடம் தேடுபவர்களுக்கு ஆதரவளிக்க மாகாண அரசு 500 மில்லியன் டாலர் செலவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள கியூபெக் மாகாணத்தில் உள்ள பொதுச் சேவைகளின் நிலை, வரி செலுத்தும் கியூபெக் வாசிகளுக்கு “நியாயமற்றதாக” உள்ளது என்று கூறிய ரொபேர்ஜ், கியூபெக் வாசிகள் குடும்ப மருத்துவர்களை அணுகுவதற்கும், வீடு கண்டுபிடிப்பதற்கும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த அறிக்கையானது, இந்த ஆண்டின் 66,500 என்ற இலக்கிலிருந்து நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான மூன்று சாத்தியமான சூழ்நிலைகளை முன்வைக்கிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளில், குடியேற்ற இலக்குகளின் எண்ணிக்கை 45,000, 35,000 அல்லது 25,000 ஆகக் குறைக்கப்படலாம்.

பிரெஞ்சு மொழிக்கு ஆபத்து இல்லாத பிராந்தியப் பகுதிகளில் புதியவர்கள் குடியேறுவதை எளிதாக்கும் வகையில், மொன்ட்ரியல் மற்றும் லாவால் பகுதிகளில் நிரந்தரமற்ற குடியேற்றக் குறைப்பு நடவடிக்கைகளில் கியூபெக் அரசு கவனம் செலுத்தும் என்று ரொபேர்ஜ் கூறினார்.

அதேவேளை, தற்போதுள்ள நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கியூபெக்கின் குடிவரவு அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரொபேர்ஜ் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடாவின் சஸ்காட்செவனில் தீவிரமடையும் காட்டுத்தீ
அடுத்த செய்தி பிரிட்டிஷ் கொலம்பியா அரசு, புதிய எரிவாயு பைப்லைன் திட்டத்திற்க்கு ஒப்புதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரயில் மீது  சாகசம் செய்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஆகஸ்ட் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பொருளாதார அறிக்கையில் நிவாரணம் உள்ளடக்கப்படும் சாத்தியம்

நவம்பர் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரபலமான அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற உறுப்புரிமை முடிவு பெற்றது

ஏப்ரல் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

ஜஸ்டின் ட்ரூடோவின் ஒன்பது வருட பிரதமர் பதவி முடிவிற்கு வருகின்றது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?