கனடாவின் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் சோகமான சூழ்நிலையில் நிறைவடைந்தது.
வான்கூவரில் பிலிப்பைன்ஸ் தெரு விழாவில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் பதினொரு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வான்கூவரில் நடந்த இந்த கொடூரமான விபத்து காரணமாக அரசியல் தலைவர்கள் தங்கள் பிரசார நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இந்த துயரமான நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
பிரதமர் மார்க் கார்னி ஞாயிற்றுக்கிழமை காலை தனது திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு, கனடா மக்களிடம் உரையாற்றினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்திருந்தார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் தனக்கு இரவோடு இரவாக இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்ததாகவும் பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.