இருவருக்கு மேற்பட்ட பெற்றோர்களைக் கொண்ட குடும்பங்களை கியூபெக் மாகாணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வகையான குடும்ப அமைப்பை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் சிவில் சட்டத்தை திருத்துவதற்கு கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கு நீதிமன்றம் ஒரு வருடம் அவகாசம் அளித்துள்ளது.
நீதிபதி ஆண்ட்ரேஸ் சி. காரின் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் இருந்து வந்த புகார்களை ஆய்வு செய்தார்.
பல பெற்றோர்களைக் கொண்ட குடும்பங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாத சிவில் சட்டத்தின் இயலாமை, மனுதாரர்களின் கனடிய அரசியல் சாசனத்தின் சமத்துவ உரிமையை மீறுவதாக நீதிபதி தீர்மானித்தார்.
இதேவேளை, கியூபெக் மாகாண அரசாங்கம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.