பென்சிலைப் பயன்படுத்தி வாக்களித்தால், அது வாக்கு மோசடிக்கு வழிவகுக்கும் என்பது போன்ற கருத்துகளை கனடாவின் தேர்தல்கள் திணைக்களம் முற்றாக மறுத்துள்ளது.
வாக்களிப்பதற்கு பேனா அல்லது பென்சிலைப் பயன்படுத்த முடியும் என அத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் எந்த எழுதும் கருவியைப் பயன்படுத்தினாலும் அவர்களின் வாக்கு எண்ணப்படும் என்பதை, தான் தெளிவுப்படுத்த விரும்புவதாக கனடாவின் தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அந்த தேர்தல்கள் திணைக்களத்தின் பணியாளர்கள், வாக்கினைச் செலுத்த வரும் வாக்காளர்களுக்கு கருப்பு ஈய பென்சில்களை வழங்க சட்டப்படி கடமைப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


