கனடாவின் பொதுத் தேர்தலில், வாக்களிப்புத் தினத்திற்கு முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற பெருமளவு வாக்காளர்கள், தங்கள் வாக்குகளைச்
செலுத்தியுள்ளனர்.
கடந்த தேர்தல்களின் முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கனேடிய மக்களின் அதிகப்படியாக
வெளிப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தேர்தல் தினம் எதிர்வரும் 28 ஆம் திகதியாக இருந்த போதும், கனேடிய தேர்தல்கள் திணைக்களம், முன்கூட்டியே வாக்குகளைச் செலுத்தும் வசதியை அண்மையில் ஏற்படுத்தியிருந்தது. இவ்வசதியைப் பயன்படுத்தி உத்தியோகபூர்வ தேர்தல் தினத்துக்கு முன்னதாகவே, 7.3
மில்லியன் கனேடியர்கள், தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இம்முறை வாக்களிப்பில் 25 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது என, கனடா தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.