கியூபெக் மக்களின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதே தனது அரசின் முதல் கடமை என, அந்த மாகாணத்தின் புதிய முதல்வரான கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்ட நிலையில், ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மளிகைப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான விசேட அறிவிப்பு ஒன்றைத் தான் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாக அவர் உறுதி அளித்தார்.
கியூபெக் மாகாணத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தனது கவனம் இருக்கும் என கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) குறிப்பிட்டார்.
ஒரு புதிய தலைமுறையின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள அவர், “அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு தலைவராக” செயல்படப் போவதாகத் தெரிவித்தார்.
புதிய முதல்வரின் கீழ் செயற்படவுள்ள கியூபெக்கின் புதிய அமைச்சரவை அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
