கியூபெக் எரிசக்தி வாரியம் அரசாங்கத்தின் உயர் வரம்பை மீறி 3.6% கட்டணங்களை உயர்த்தியுள்ளது
புதிய கட்டணங்கள் தொடர்பில் ‘கேள்விக்கு இடமில்லை’ என்று லெகோல்ட் கூறுகிறார்
கியூபெக்கின் எரிசக்தி வாரியம், குடியிருப்பு ஹைட்ரோ-கியூபெக் வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டு முதல்வர் வாக்குறுதியளித்த மூன்று சதவீத உச்சவரம்பு இருந்தபோதிலும், அதன் வணிக வாடிக்கையாளர்களைப் போலவே 3.6 சதவீத அதிகரிப்பைக் எதிர்கோவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் 1ம் திகதி முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த அதிகரிப்பு தேவையின் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் காரணமாக ஏற்பட்டது என தெரிவிக்கப்ட்டுள்ளது
மேலும் 2050 ஆம் ஆண்டுக்குள் அதன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஹைட்ரோ-கியூபெக் அடுத்த சில ஆண்டுகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்கிறது எனவும் , மேலும் பொது பயன்பாட்டு கட்டணங்கள் அந்த வளர்ச்சிக்குத் தேவையான வருவாயின் அதிகரிப்பைப் பிரதிபலிக்கவில்லை எனவும் கியூபெக் எரிசக்தி வாரியம் தெரிவித்துள்ளது.