முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக குறித்த தொழிற்சாலையின் பழைய இயந்திரங்கள் திருத்தம் செய்யாப்பட்டு இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் சுனில் கந்துநித்தி மற்றும் நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷ சூரியபெருமா ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலக, பிரதேச செயலக உயர் அதிகாரிகள் குறித்த பிரதேச மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.