கனேடிய கால்பந்து பயிற்சிவிப்பாளராண ஜெஸ்ஸி மார்ஷ் நேற்று அரசியலில் களமிறங்கினர் .
ரேசின் விஸ்கான்சினில் பிறந்த 51 வயதான முன்னாள் அமெரிக்க சர்வதேச வீரரான மார்ஷ், கலிஃபோர்னியாவின் இங்கிள்வுட்டில்(Inglewood) உள்ள சோஃபி விளையாட்டரங்கில் நடந்த CONCACAF செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இது மார்ச் மாதம் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பனாமா ஆகிய நாடுகள் பங்கேற்கும் CONCACAF நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமீபத்தில் இடம்பெற்ற ஹாக்கி இறுதிப் போட்டி குறித்தும், கனேடிய ஆண்கள் அணியைப் பயிற்றுவிப்பவராக, “இப்போது நடக்கும் இந்த அரசியல் விடயங்கள் எவ்வாறு இருக்கின்றது என கேள்வி கேட்கப்பட்டபோது,
“ஒரு அமெரிக்கராக, எங்கள் வரலாற்று ரீதியாக பழமையான, வலிமையான மற்றும் மிகவும் விசுவாசமான கூட்டாளிகளில் ஒருவருக்கு நாங்கள் காட்டிய ஆணவம் மற்றும் அலட்சியத்தைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன்” என்று மார்ஷ் கூறினார். “ஆனால் ஒரு விடயம் நிச்சயம், ஒரு மாதத்திற்குப் பின்பு நான் எதிர்நோக்கும்போது, இது எங்கள் அணிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை நான் அறிவேன் – நம்மிடம் உள்ள மனநிலை, நம் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே , இந்தப் போட்டியை அணைத்து வகையிலும் தொடர வேண்டும் எனும் ஆசை மற்றும் கனடாவின் குணம் என்ன என்பதை மைதானத்திலும் வெளியேயும் சரியாகக் காட்ட வேண்டும்.”எனவும் அவர் தெரிவித்தார்.

