மொன்றியலில் பனி அகற்றுதல் இறுதி கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதால் மொன்றியல் வீதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்யும் பனி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் குறித்த பணியானது வழக்கத்தை விட மெதுவான வேகத்தில் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதிகளில் இருந்து சுமார் முக்கால் பங்கு பனி அகற்றப்பட்டுள்ளது என நகராட்ச்சி செய்தித் தொடர்பாளர் பிலிப் சபோரின் தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைய, நகராட்ச்சியானது போக்குவரத்து லாரிகளின் எண்ணிக்கையை 30 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்
நகராட்ச்சி ஊழியர்கள் சுமார் ஆறு மில்லியன் கன மீட்டருக்கு சமமான பனியை அகற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது
இதே வேளை பெய்து வரும் மழை காரணமாக பனிபொழிவினால் ஏற்பட்ட பனியை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.