ஐ.எஸ்.ஐ.எல் போராளி ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட கியூபெக் பெண் ஒருவர், தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
பதின்ம வயதிலேயே அந்த கியூபெக் பெண் சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார்.
29 வயதான ஓமைமா சௌவே (Oumaima Chouay) என்ற பெயருடைய அந்த பெண்ணுக்கு ஏற்கனவே தடுப்புக்காவலில் இருந்த 110 நாட்களுடன் கூடுதலாக ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டதும், மூன்று வருடங்கள் நன்னடத்தை கண்காணிப்பும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு போராளியைத் திருமணம் செய்ததன் மூலம் பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவு அளித்ததாக கனடாவில் தண்டனை பெற்ற முதல் நபர் சௌவேதான் என்று கனேடிய மத்திய வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குற்ற ஒப்புதலின் ஒரு பகுதியாக, அவர் மீதான மேலும் மூன்று தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
கடந்த 30 மாதங்களாக சௌவேவை ஆய்வு செய்த சுயாதீன நிபுணர்கள், அவர் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், சமூகத்திற்கு அவர் ஆபத்தானவர் அல்ல என்றும் கண்டறிந்துள்ளனர்.
