மானிப்பாய் நவாலி பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த்த சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூக்கில் தொங்கிய ஆண் 47 வயதுடைய பாலகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை அருகிலிருந்த அவரது உறவினர்கள் கண்டறிந்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்படி பொலிஸாரின் விசாரணையின் போது தெரிய வருவதாவது மனைவி அதிக கடன் பெற்றதன் காரணத்தினால் பாலகிருஷ்ணன் மனவிரக்தியில் உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.