கொழும்பின் பல பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பொரளை பகுதியில் 83.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபருக்கு இன்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்டத்தரணிகள் நிரூபித்துள்ள நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இரு தரப்பு முன்வைப்புகளையும் பரிசீலித்த நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


