நாட்டில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் தற்போது இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடி என திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி விநாடிக்கு 50,176 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாக இந்த நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


