கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று விபத்தொன்று சம்பவித்துள்ளது.
குறித்த பகுதியில் இரண்டு பேருந்துகளும் ஒரு டிப்பர் வாகனமும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு பேருந்துகளில் பயணித்த பயணிகள் மற்றும் டிப்பரில் பயணித்த பயணி ஒருவர் உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை, மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


