நாட்டிலுள்ள சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கண்டி மாவட்டத்திலுள்ள உடுதும்பர பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மழையுடனான வானிலை நிலவுவதால், மண்சரிவு அபாய எச்சரிக்கை வலையத்தினுள் இருக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


