நாட்டில் மாகாண சபை தேர்தல் எப்போது நிகழும் என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி புதிய யோசனை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற விசேட குழுவிடம் யோசனை ஒன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நாடாளுமன்றத்தில் சிறிய திருத்தத்தை எளிய பெரும்பான்மை முறையூடாக நிறைவேற்றுவதன் மூலம், தேர்தலை நடத்தி முடிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்திம பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலை நடத்த வேண்டிய நோக்கம் அரசாங்கத்திற்கு இருந்தால் இதனை செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.
