கடந்த 2024 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் கசிந்தமை தொடர்பான விடயத்தில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
