தான் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனில் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நான் பெருமையுடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் 2025 ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று ட்ரம்ப் கூறினார்.
எவ்வாறாயினும், ட்ரம்பின் கருத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளிக்கவில்லை. இஸ்ரேலுடன் மோதல் ஆரம்பித்த நாளில் சுமார் 250 பேர் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 100 பேர் தற்போது ஹமாஸின் காவலில் உள்ளனர்.
