Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்.

நவம்பர் 25, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேலை குறிவைத்து லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆறு ஏவுகணைகள் தமது நாட்டிற்குள் வந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மத்திய இஸ்ரேலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், இதில் ஐந்து ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், ஒன்று தரையில் இறங்கியதாகவும் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவின் வடக்கே உள்ள நெதன்யா மற்றும் ஹெர்ஸ்லியாவிலும் சைரன்களை ஒலித்தது.

இதனிடையே, பல ஆளில்லா விமானங்களும் இஸ்ரேலை குறிவைத்து தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளில்லா விமான தாக்குதல் கலிலி பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டது.

மேலும், இஸ்ரேல் மீது மேலும் பல தாக்குதல்கள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், மத்திய லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

சனிக்கிழமையன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் எட்டு மாடிக் கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 33 பேர் காயமடைந்தனர்.

தலைநகர் பெய்ரூட் நகரின் மீது அதிகாலை 4.00 மணியளவில் ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. லு பாஸ்தாவில் உள்ள அல் மாமூன் வீதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை தொடர்ந்து கட்டிடம் இருந்த பகுதியில் பாரிய பள்ளம் ஏற்பட்டது.

ஏவுகணை ஏவுதல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்டதாகவும், மூன்று கடுமையான வெடிப்புகள் கேட்டதாகவும் AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி ராஜஸ்தான் அணியில் இணையும் இலங்கை வீரர்கள்.
அடுத்த செய்தி இந்தியப் பெருங்கடல் அருகே படகு விபத்து – கடலில் மூழ்கி 24 பேர் பலி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேற்று கிரகவாசிகளின் உடல்கள்!

செப்டம்பர் 9, 2024
அண்மைய செய்திகள்உலகம்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – 7 பேர் பலி

மார்ச் 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, சீனாவுடன் கைகோர்க்கவுள்ளார்.

ஜூலை 29, 2024
உலகம்

மும்பையில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு.

டிசம்பர் 21, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?