அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்களின் வாழ்க்கைத் துணையை ஏமாற்றுவோர் இனி சட்டத்தின் படி தண்டிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆளுநர் கெத்தி ஹோச்சல் நவம்பர் 22ஆம் திகதி இது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டார். இதற்க்கு முன்னதாக, நியூயார்க்கில் திருமணமானவர்கள் கள்ள உறவு வைத்திருந்தால் அது குற்றமாக கருதப்பட்டது.
வீட்டில் கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்க, ஒருவர் வேறொருவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது தவறான நடத்தை தொடர்பான ‘பி’ வகை குற்றமாகக் கருதப்பட்டது.
இவ்வாறான குற்றத்தினை செய்கிறவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என முன்பிருந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இத்தகைய விவகாரங்கள் அந்தந்த நபர்களால் கையாளப்பட வேண்டுமே தவிர, நமது குற்றவியல் நீதி அமைப்பால் அல்ல என ஆளுநர் கெத்தி ஹோச்சல் தெரிவித்துள்ளார்