நாடாளுமன்றப் பொதுச்சபையில் வெற்றிடமாகியுள்ள இருந்த மூன்று ஆசனங்களுக்கான தொகுதிகளுக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில், கியூபெக் மாகாணத்தின் முக்கியத் தொகுதியான சிக்கூட்டிமி-லே ஃபியோர்ட் (Chicoutimi–Le Fjord) தொகுதியை, ஆளும்கட்சியான லிபரல் கட்சி (Liberal Party of Canada) கைப்பற்றியுள்ளது.
முன்னாள் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் மார்டெல் (Richard Martel) செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற பொதுச்சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், இத்தொகுதிக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான லிபரல் கட்சியின் வேட்பாளர் டேனியல் கோபெயில் (Daniel Gobeil) 51 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இத்தொகுதியில் புளொக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சி சார்பில் போட்டியிட்ட கரோலின் டுபே (Caroline Dubé) 32.9% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த காலங்களில் கன்சர்வேடிவ் கட்சி வசமிருந்த இத்தொகுதியை லிபரல் கட்சி வென்றுள்ளமை மத்திய அரசியலில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.



