நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 55,406 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,565 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


