குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கியூபெக் மாகாண அரசு ‘கேபி மற்றும் ரெனால்ட் சட்டம்’ (Gabie and Renaud Law) என்ற புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, மொன்றியலில் 11 வயது கேபி மற்றும் 13 வயது ரெனால்ட் ஆகிய இரு சிறுவர்கள் அவர்களது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
அந்தத் தந்தை வன்முறை குணம் கொண்டவர் என்று தாய் பலமுறை எச்சரித்தும், நீதிமன்றம் அவருக்கு குழந்தைகளைச் சந்திக்க அனுமதி அளித்தது.
இந்தத் தவறான முடிவால் நிகழ்ந்த துயரமே, இந்தச் சட்டத்தின் உருவாக்கத்துக்குக் காரணமாக அமைந்தது.
அந்தச் சிறுவர்களின் நினைவாகவே இந்தப் புதிய சட்டத்திற்கு அந்த சிறுவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், விவாகரத்து அல்லது குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான வழக்குகளில், ஒரு பெற்றோரின் ‘உரிமையை’ விடக் குழந்தைகளின் ‘பாதுகாப்பிற்கே‘ நீதிமன்றம் முதலிடம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
