வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா குருமன்காட்டில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் தேதி நடத்த உத்தேசித்திருக்கின்ற வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், மாநாட்டை எவ்வாறு சிறப்பாக நடத்த வேண்டும், வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினுடைய முக்கியத்துவம், வரலாறு, அதனுடைய தாற்பரியம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலின் முடிவில் 11 பேர் கொண்ட ஒரு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் பாசறைப்பாணர் மாமனிதர் தேனிசை செல்லப்பாவின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்து.
தவத்திரு வேலன் சுவாமிகள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி, அருட்தந்தையர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
