யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள கடற்கரை பகுதியில் கடற்படையினர் கடலோர காவல்படையுடன் இணைந்து சிறப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் 6 கிலோ 865 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.
தங்கத்தை கடத்தி வந்தவர்கள் யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
