கியூபெக் மாகாணத்தின் தேர்தல் தொகுதிகளை மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாகாணத்தின் 125 தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையைச் சமமாகப் பேணுவதற்காக சுயாதீன தேர்தல் எல்லை நிர்ணய ஆணையம் இந்தப் புதிய தேர்தல் தொகுதி வரைபடத்தைத் தயாரித்தது.
எனினும் இந்தத் தொகுதி மறுசீரமைப்பைத் தடுத்து நிறுத்த விரும்பிய கியூபெக் அரசாங்கம் 2024-ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.
ஆனால், அந்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், ஜனநாயக முறைப்படி வாக்காளர்களின் பிரதிநிதித்துவத்தைச் சமமாக உறுதிப்படுத்தத் தொகுதி மறுசீரமைப்பு அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம், மொன்றியல் மற்றும் காஸ்பே (Gaspé) ஆகிய பகுதிகள் தலா ஒரு சட்டமன்றத் தொகுதியை இழக்கின்றன.
அதேவேளை, மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் லோரண்டியன்ஸ் (Laurentians) மற்றும் சென்டர்-டு-கியூபெக் ஆகிய பகுதிகளுக்குத் தலா ஒரு புதிய தொகுதி வழங்கப்படவுள்ளது.
