கியூபெக் மாகாணத்தின் லோங்குயில் பகுதியில் குடும்ப வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், தனது காலில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு கண்காணிப்பு வளையலைத் (Electronic tracking bracelet) துண்டித்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
35 வயதுடைய ஆண்ட்ரேஸ் பெலிப் முனோஸ் (Andres Felipe Munoz) என்ற அந்த நபரைத் தேடும் பணியில் கியூபெக் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முனோஸுக்கு எதிராகப் பல பிரிவுகளின் கீழ் பிடியாணை (Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவல்படி, முனோஸ் தற்போது மொன்றியல் நகரம் அல்லது செயின்ட்-ஹைசிந்தே (Saint-Hyacinthe) பகுதிகளில் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. அவர் கியூபெக் மாகாணத்தின் வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் அல்லது எல்லை தாண்டி அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவர் தனது கண்காணிப்பு வளையலைக் கழற்றி எறிந்துள்ளதால், தற்போது அவர் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ். (GPS) மூலம் கண்டறிய முடியாமல்
போயுள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
