மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்காலிக ‘முன்கூட்டிய ஓய்வு ஊக்கத்தொகை’ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தில் எவ்வித குறைப்பும் இன்றி, முன்கூட்டியே பணியிலிருந்து ஓய்வுபெற வழிவகை செய்கிறது.
மத்திய அரசுத் துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கிலேயே, இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு PSAC மற்றும் PIPSC போன்ற முக்கிய தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இத்திட்டத்தில் பங்குபற்றுவதற்குத் தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஏற்கனவே கடிதங்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
