Surrey நகரசபையின் நிதித்துறையைச் சேர்ந்த முன்னாள் எழுதுவினைஞர் ஒருவர், நகரசபை நிதியில் பாரிய மோசடியை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
2.5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி மோசடிக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
Surrey நகரசபையின் சில ஆவணங்களில் போலியான கையொப்பம் இருப்பதாக கேள்வி எழுப்பப்பட்ட பின்னர், 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில், நிதித்துறையில் தாம் வகித்து வந்த பதவியை விட்டு விலகினார்.
இந்த நிதிசார் முறைகேடு, அந்த பெண்ணின் முந்தைய சட்டப்பூர்வ பெயர், அவரது தாயார் மற்றும் அவரது சிறிய கேக் தயாரிக்கும் வணிக நிறுவனம் ஆகியவற்றின் பெயரில் வழங்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 183 காசோலைகளை கண்டுபிடிக்க வழிவகுத்தது.
பல ஆண்டுகளாக செயலற்றிருந்த Surrey நகரசபை கணக்குகளில் இருந்து இந்த காசோலைகள் மூலம் பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Surrey நகரசபையின் தலைமை நிதி அதிகாரி கடந்த ஜனவரியில் காவல்துறையைத் தொடர்புகொண்டு, நிதித்துறையில் உள்ள தனது ஊழியர்கள் ஒரு மோசடியை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.