நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.
இதன் மூலம், தற்போதைய தேர்தல் முறையே அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடியாகும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெறுபவர் மட்டுமே வெற்றி பெறுவதாகவும் இதனால் சிறு கட்சிகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் பாதிக்கப்படுவதாகவும், இது கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனத்தை (Charter of Rights and Freedoms) மீறுவதாகவும் கூறி வழக்குத் தொடரப்பட்டது.
‘பேர் வோட்டிங் பி.சி’ (Fair Voting BC) மற்றும் ‘ஸ்பிரிங்டைட் கலெக்டிவ்’ (Springtide Collective) ஆகிய அமைப்புகள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஒண்டாரியோ மாகாண மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், தேர்தல் முறையில் மாற்றம் செய்வதை நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளன.

