மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அடுத்த ஆண்டின் முதல் வாரம் ஐந்து நாட்களும் கட்டாயமாக அலுவலகத்தில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்படலாம் என்ற வதந்திகள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாகப் பதிலளிக்குமாறு அந்த தொழிற்சங்கங்கள் மத்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளன.
இந்த வதந்திகளால் ஊழியர்களிடையே “கடுமையான பதற்றம்” ஏற்பட்டுள்ளதாகத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
அரசாங்கத்தின் திறைசேரிச் செயலகமானது (Treasury Board Secretariat) தற்போதுள்ள விதிகள் மாறவில்லை என்று தெரிவித்திருந்தாலும், தொழிற்சங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்திப்பு ஒன்றைக் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
