நாட்டில் தடைசெய்யப்பட்ட “தாக்குதல் வகை” (Assault-style) துப்பாக்கிகளை மக்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொண்டு, அதற்கு நஷ்டஈடு வழங்கும் திட்டத்திற்கான காலக்கெடு, கடந்த மார்ச் மாதம் 31-ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
எனினும், மத்திய அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கில் பாதிக்கும் குறைவான துப்பாக்கிகளே இதுவரை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுமார் 136,000 எனும் எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை மக்கள் ஒப்படைப்பார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்த்து, அதற்காக 248 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியிருந்தது.
ஆனால், காலக்கெடு முடிவடைந்த நிலையில், சுமார் 52,000 துப்பாக்கிகள் மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தின் இலக்கில் வெறும் 38 சதவீதம் மட்டுமே என்பது சுட்டிக்காட்டத் தக்கது.
இந்த நிலையில், துப்பாக்கி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஒதுக்கப்பட்ட தொகையை விட, இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதற்கான செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதுவரை மத்திய அரசினால் சுமார் 779 மில்லியன் டொலர்கள் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நஷ்டஈடு பெறுவதற்கான காலம் முடிந்துவிட்ட போதிலும், “தாக்குதல் வகை” துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் (Amnesty) எதிர்வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி அன்று முடிவடைகின்றமை குறிப்பிடத் தக்கது.
