ரொரொண்டோ – ரிச்மண்ட் ஹில் பகுதியில், ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யோர்க் பிராந்திய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அதிகாலை 3 மணிக்குப் பிறகு Skywood Drive மற்றும் Rollinghill Road க்கு அருகிலுள்ள வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள செயின்ட் மார்கரெட் டி யூவில் அமைந்துள்ள கத்தோலிக்க பள்ளி வளாகத்தில், ஒரு gas can மற்றும் ஒரு பை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகிறது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர்.
மற்றொருவர் தானாகவே தப்பித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியை கண்டறிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று, தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
