அதிகரித்து வரும் வீடமைப்பு நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், புதிய கூட்டாட்சி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
Build Canada Homes எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், கனடாவில் வீடமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து, கட்டுமானத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வீடமைப்பு கட்டுமானத்தை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற லிபரல் கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் அமைக்கப்படுகிறது.
வீடமைப்புத் திட்டங்களுக்கான கூட்டாட்சி நிதி, பொது நிலங்களில் கட்டுமான அனுமதி வழங்குதல், திட்டங்களின் ஆரம்ப கட்டங்களில் நிதியுதவி அளித்தல் போன்ற முக்கியப் பொறுப்புகளை இந்த நிறுவனம் மேற்கொள்ளும்.
இந்த புதிய நிறுவனத்திற்கு 13 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் கார்னி அறிவித்துள்ளார்.
இந்த நிதி, ஆரம்ப கட்டமாக நாடு முழுவதும் ஆறு இடங்களில் 4,000 தற்காலிக வீடுகளை (modular homes) கட்டுவதற்கு பயன்படுத்தப்படும்.
இந்த வீடுகளின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 45,000 வரை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டப்படவுள்ள இந்த ஆறு இடங்களும் ஒட்டாவா, எட்மண்டன், வின்னிபெக், டொரண்டோ, கியூபெக்கின் லாங்கெயில் மற்றும் நோவா ஸ்கோஷியாவின் டார்ட்மவுத் ஆகிய இடங்களில் உள்ளன.
இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டொரண்டோ நகர முன்னாள் கவுன்சிலர் அனா பைலாோ, இந்த புதிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
