கனடாவின் பிரதமர் Mark Carney, பாராளுமன்றத்தின் முக்கியமான கேள்வி நேரம்(Question Period)-க்கு குறைந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேள்வி நேரம் என்பது, எதிர்க்கட்சிகள் பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு, அரசின் செயல்பாடுகளை கண்காணிக்கும் முக்கிய நேரமாகும்.
ஆனால், சமீப காலங்களில் Mark Carney இந்த அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்றும், முக்கிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் இருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்
பிரதமர் நேரடியாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், கேள்வி நேரத்தை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அரசின் ஆதரவாளர்கள், பிரதமர் முக்கிய கொள்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதால், சில அமர்வுகளில் பங்கேற்க முடியாமல் இருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இவ்வாறாக, பிரதமர் மார்க் கார்னியின் கேள்வி நேரம் பங்கேற்பு குறித்த விவகாரம் கனடா அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
