Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் கார்னியினால் முன்மொழியப்பட்ட சட்டத்திற்க்கு எதிர்கட்சியினால் எதிர்ப்பு

ஜூன் 12, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட “வலுவான எல்லைகள் சட்டம்” (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்ட புதிய சட்டமூலம், வழக்கறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

இந்த 140 பக்கங்களடங்கிய சட்டமூலத்தில் மறைந்துள்ள சில அம்சங்கள், கனடியர்களின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், எல்லைப் பாதுகாப்புடன் தொடர்பில்லாத பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, காவல்துறையினர் பிடியாணை இல்லாமல் இணையப் பாவனையாளர்களின் தகவல்களை அணுகுவதற்கு அனுமதிக்கும் விதிகள் குறித்து அதிக கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகள் “சட்டரீதியான அணுகல்” (Lawful Access) தொடர்பானவை.

இதன் மூலம், காவல்துறையினர் இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இணையச்சேவை நிறுவனங்களிடமிருந்து அடிப்படை சந்தாதாரர் தகவல்களை, நீதிமன்றத்தின் பிடியாணை இல்லாமல் கோர முடியும்.

கனடாவின் காவல்துறையினர் இவ்வாறான “சட்டரீதியான அணுகல்” அதிகாரங்களுக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரி வருகின்றனர்.

இதற்கு முன் பலமுறை இவ்வாறான சட்டங்களை இயற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை தோல்வியடைந்தன.

2014 ஆம் ஆண்டில், முன்னாள் ஹார்ப்பர் அரசாங்கம் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து, தோல்வியடைந்தது.

தற்போதுள்ள கார்னி அரசாங்கமும் இந்த அதிகாரங்களை நியாயப்படுத்த, குழந்தை பாதுகாப்பை ஒரு காரணமாக முன்வைத்துள்ளது.

கனேடிய குழந்தை பாதுகாப்பு மையம் (Canadian Centre for Child Protection) போன்ற அமைப்புகள், சட்டரீதியான அணுகலின் ஒரு வடிவத்தை ஆதரிக்கின்றன.

ஐபி முகவரியை ஒரு சந்தேக நபருடன் இணைக்க பிடியாணை பெறுவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும், இதனால் முக்கியமான ஆதாரங்கள் இழக்கப்படலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

கனேடிய காவல் துறை தலைவர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோமஸ் கேரிக் (Thomas Carrique) கூறுகையில், குற்றவாளிகள் பயன்படுத்தும் மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் குறியாக்க தொழில்நுட்பங்கள் தற்போதைய சட்டங்களை விட மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் “கட்டுப்பாடற்ற அணுகலை” கோரவில்லை என்றும், “நியாயமான சந்தேகத்தின்” அடிப்படையில் “மிகக் குறைந்த தகவல்களை” மட்டுமே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு
அடுத்த செய்தி தஞ்சம் புகுந்தவர்களிடம் மோசடி செய்த மூவர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோவில் டிக்கட் இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவோர் அவதானம்…

பிப்ரவரி 3, 2025
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு ஜாம்பியாவில் அஞ்சலி நிகழ்வு

பிப்ரவரி 16, 2026
கனடாமுதன்மை செய்தி

Commercial Pilot போல நடித்து இலவசமாக விமானப் பயணம் செய்த இளைஞர் கைது

ஜனவரி 22, 2026
கனடாமுதன்மை செய்தி

வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ

ஜூலை 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?