மொன்றியலின் வசதி படைத்த பகுதியாகக் கருதப்படும் கோல்டன் ஸ்கொயர் மைல் (Golden Square Mile) பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், மாணவர் விசாவில் கனடா வந்திருந்த 18 வயது இளைஞர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மொன்றியலின் மையப்பகுதியிலுள்ள டு மியூசி (Du Musée) வீதியில் அமைந்திருந்த ஒரு குடியிருப்பில் ஆர்தர் கெடிக்யன் (Arthur Ketikyan) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அதே ஆண்டு கோடைகாலத்தில் கல்வி கற்பதற்காகக் கனடா வந்திருந்த ஒரு மாணவரைப் பொலிஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று காலை மொன்றியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது, தான் கொலை செய்ததை அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். கனடியச் சட்டப்படி, இரண்டாம் நிலைக் கொலைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவது வழமை என்று கூறப்படுகின்றது. இருப்பினும், அவர் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பிணையில் (Parole) வெளிவர முடியும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிபதிக்கே உண்டு என்ற நிலை காணப்படுகின்றது.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு மற்றும் பிணை தொடர்பான காலக்கெடு குறித்த விவரங்கள் வரும் மே மாதம் அறிவிக்கப்படும் என நீதிபதி அலெக்சாண்டர் புஷர் தெரிவித்துள்ளார்.
