இலங்கை கடற்படையினரால் மேற்க் கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 53 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 13 டிங்கிகள் மற்றும் 4 டிராக்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு கிழக்கு, வடக்கு ,வடமத்திய, வடமேற்கு என பல இடங்களில் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கைதானவர்களிடம் கைப்பற்றப்பட்ட உபகரணங்களை இலுப்புக்கடவை பொலிஸ் சிறப்பு அதிரடி படை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, வாழைச்சேனை, மண்டைதீவு, நானாட்டான், கிண்ணியா மற்றும் முல்லைத்தீவு மீன் வள ஆய்வாளர் அலுவலங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
