போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் தங்களுடைய ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இன்றையதினம் அமுலுக்கு வரவிருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
