வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக நாளை காலை 8 மணிக்கு நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் போதியளவான சேவைகள் இல்லாமையால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக தாதியர் பற்றாக்குறை , நோயாளர் காவு வண்டி இன்மை, 24 மணிநேர சேவை வழங்கப்படாமை மற்றும் வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் ஆகியவற்றுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டத்திற்கு வைத்தியசாலையில் கடமை புரிவோரும் , வைத்தியசாலைக்கு வருகை தரும் தரப்பினரையும் போராட்டத்தில் இணையுமாறு கூறப்பட்டுள்ளது.
