முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜொஹான் பெர்னாண்டோ , ஜெரம் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட ஐவர் கைதாகியிருந்த நிலையில் தற்போது மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லங்கா சதொச நிறுவனத்திற்கு உரிய லொறியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி வத்தளை நீதவான் நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
